Investor Help Centre

BETTER FOR INVESTORS

At Eelam Club you can earn attractive risk adjusted returns by quickly and easily investing in a diversified portfolio of loans.

  • Solid returns.
  • Simple and straightforward.
  • Easy to diversity across many loans.
  • Unlock new assets,invest on tamil people.

HOW TO INVESTS  

  • Open an account and transfer as little as a $10.00 minimum initial deposit.
  • Quickly and easily build a portfolio by investing in a range of loans in increments as little as $10.00
  • Receive payment of principal and interest as borrowers repay their loans.
  • Reinvest payment or withdraw.  

EELAM CLUB INC

  • இது ஒரு வங்கி அல்ல
  • இது ஒரு வலை வங்கி
  • Eelamclub is a web bank.

ஒவ்வொரு தமிழனும் Eelamclub உடன் இணைந்த வட கிழக்கு மற்றும் மத்திய மாகாண இலங்கையிலும் தமிழகத்திலும் முதலீடுகளைச் செய்வதன் மூலம் Eelamclub குடும்பத்துடன் இணைந்து தமிழர் தாயகத்திற்கான நமது வரலாற்றுக் கடமையை செவ்வநே செய்வோம்.

Eelamclub குடும்பத்துடன் இணைந்து முதலீட்டாளராக உங்களுக்கு சில துறைகள்

  • பங்கு பத்திரத்தில் முதலீடு
  • விளையாட்டு துறைசார் பங்கு
  • கடன் பத்திரம்
  • வட்டி இல்லாக் கடன்
  • மிகக் குறைந்த வட்டிக் கடன்
  • தொழில் சார் முதலீடு
  • பயணிகள் முற்பண கடன்
  • மாணவர் கல்விக்கடன்

SHARES- AN  INTRODUCTION

Eelamclub அமெரிக்காவின் NYS பதிவு செய்யப்பட்டு ஒவ்வொன்றும் $10 பெறுமதியான பங்குப்பத்திரமாக விற்கப்பட்டு மேலதீக மூதலீட்டைத் திரட்டி வருகிறோம். ஒருவர் எத்தனை பங்குப்பத்திரத்தையும்  (SHARES) வாங்கி நீண்டகால குறுகிய கால முதலீடாக வைத்துக் கொள்ளலாம்.  இவை  உலகத்  தமிழ்  சமூகத்திடம்  விக்கப்பட்டு பெறப்படும் மேலதீக மூலதனம் முழுமையாக இலங்கை, இந்தியாவிலும் தமிழர் பொருளாதாரத்தின் மேல் முதலீடு செய்து வருகின்றோம்.

முதலீடு செய்து வருகின்றோம்.

Special Shares Of Eelam Club

Eelam Club பல்வேறு துறைகளில் முதலீட்டை செய்து வருகின்றது. அவ்வாறு  செய்யப்படும் ஒரு துறை சார் தொழிலில் ஒரு தமிழன் Eelam Club உடன் சேர்ந்து குறிப்பிட்ட தொழிலில் மட்டும் தமது முதலீட்டை செய்ய"விரும்புவர். அவ்வாறு குறிப்பிட்ட தொழிலில்  eelamclub உடன் இணைந்து முதலீடு செய்யும் நபர் குறிப்பிட்ட தொழிலின் பங்குதாரராகின்றார். இவ்வாறான முதலீட்டாளருக்கு பிரத்தியேகமான (special shares)பங்குகள் வழங்கப்படும்.

Special share holders பிரத்தியேக பங்கு பத்திர உரிமைகளும் கடமைகளும்.

  • குறிப்பிட்ட தொழிலின் நிர்வாகத்தில் தலையிடவும் மாற்றங்களை கொண்டு வரவும் உரிமையுண்டு.
  • தொழில் நுட்ப, சந்தை படுத்தல்லில் மாற்றத்தைக்கொண்டு வரலாம்.
  • Eelam Club இன் நிர்வாகத்தில் தலையிட முடியாது. Eelam Club பொது பங்குதாரரின் உரிமைகளை பெற முடியாது.
  • special share holders குறிப்பிட்ட தொழிலில் ஈட்டப்படும் இலாப நட்டங்களின் விகிதத்தை தனது பங்காக  கொள்வர்.

உதாரணம்:-

ஒரு மீன் பண்ணை அமைக்கப்பட்டால் மொத்த முதலீடு ரூபா 2500000
அதில்

  • Eelam club ரூபா 500000 (20%)
  • A நபர் ரூபா 1000000 (40% பங்கு)
  • B நபர் ரூபா 500000  (20% பங்கு)
  • C நபர் ரூபா 500000/= 20% பங்கு

நிதி ஆண்டு இறுதியில் குறிப்பிட்ட  மீன் பண்ணை ரூபா 1000000 இலாபம் ஈட்டிக்கொண்டால் ஒவ்வொருவரும் தமது விகிதாசாரத்தை இலாபமாக நேரடியாக பெறுவார்.அல்லது மறு முதலீடு செய்வர்.
அதை போல

Eelamclub நிறுவன பொதுப் பங்குதாரர் மீன் பண்ணையில் இருந்து இலாபமாக பெறப்படும் ரூபா 200000 (20%) தனது பொதுப்பங்கின் பெறுமதியில் இணைத்துக்கொள்வர் அல்லது பணமாக எடுத்துக்கொள்வார்.


Why Special Share Of  Eelam Club

புலம் பெயர் வாழ் தமிழர்கள் பல்வேறு துறைகளில் நிபுணர்த்துவம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களின் திறமை, அனுபவம், அறிவை எமது வட கிழக்கு மக்களிடம்  கொண்டு செல்வதன் மூலம் முழுமையான உலக தரம் வாய்ந்த பெறுபெறுகளை பெறமுடியும்.

பலர் இலாப நோக்கோடும் பலர் இலாப நோக்கற்றும் வேறுசிலர் நீண்ட காலத்தில் சிறிய இலாபத்தை மனதில் கொண்டும் வடகிழக்கு மக்களின்  நலனுக்காக தமது தனிச்சிறப்பை  வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான துறைசார் வல்லுனர்களுடனும் முதலீட்டாளர்களுடனும் Eelamclub இணைந்து பயணிக்கின்றது.

இச்சிறப்பானவர்கள் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்காக அத்தொழில் சார்பான சிறப்புப் பங்குப்பத்திரம் வழங்கப்படுகிறது.

உதாரணமாக :

  • ஒரு tennis player வட கிழக்கில் டென்னிஸ் விளையாட்டை ஊக்கப்படுத்தி வளர்த்திட விரும்புவார்.அவ்வாறு ஆர்வம் உள்ளவர்கள்  Eelam Club உடன் இணையும் போது வடகிழக்கில் தேவையான இடங்களை தெரிவு செய்து tennis court களை நிர்மாணித்து அப்பகுதிகளில் tennis club உருவாக்கப்பட்டு சேவையுடன் கூடிய சிறியளவு இலாபத்தை ஈட்டிக்கொள்வதை உறுதி செயயப்படும்.

வருமானம் இல்லாத இலாப நோக்கம்  இல்லாத எந்த துறையும் தொடர்ந்து வெற்றிப் பயணத்தை நிகழ்த்த முடியாது. இலவசங்களும் நன்கொடைகளும் எல்லா சந்தர்ப்பத்திலும்  முன்னேற்றத்தை அல்லது வெற்றியை  கொடுத்து விடாது.நமது நீண்ட பயணத்தை சிதைப்பதாகவே அமையும் என நாம் நம்புகிறோம்.

What’s Eelamclub?

  • IT’S NOT A BANK
  • IT’S A WEB BANK

வடகிழக்கில் தமிழர்களின் பொருளாதாரம் பெருமளவில் விவசாயம்,கடற்தொழில், சிறுகைத்தொழில் ஆகியவற்றை சார்ந்தே இருக்கின்றது. பெருமளவு மக்கள் இத் துறைகளிலேயே ஈடுபட்டுள்ளனர். இவர்களை அடிப்படையாக கொண்டே சிறுவியாபாரமும் சேவைத்துறையும் செயற்படுகிறது. எனவே விவசாயம், கடற்தொழில்,சிறுகைத்தொழில் போன்றவற்றை ஊக்கிவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் புலன்பெயர் தமிழ் சமூகம் பல வகையிலும் காத்திரமான பங்களிப்பை செய்துவருகின்றது.

Eelamclub.inc துறைசார் தொழில் முறைகளில் வட்டி இல்லா நீண்ட குறுகியகால கடன்களை தொழிலின் தன்மைக்கேற்ப வழங்கி வருகிறது. வடகிழக்கு கல்வியில் தலைசிறந்து விளங்கியது.இன்று கல்விச்சமூகம் ஆரோக்கியமானதாக இல்லை. அதற்கான காரணங்களை நாம் அறிவோம். இன்றும் மணவர் கல்விக்கான பொருளாதாரப் பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவ்வாறு முகம் கொடுக்கும் மாணவர்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு மாணவர் தேவைக்கேற்ப Eelamclub மாணவர்க்கு நீண்ட,குறுகிய கால வட்டி இல்லா கல்விக்கடன் மூலம் உதவி வருகிறது.

மேலும்,

  • மாணவர் கல்விக்கடன்
  • விவசாயம்,விவசாயம்  சார்கடன்
  • கடல்சார் தொழில் கடன்
  • சிறு வியாபாரக் கடன்
  • சிறு சுய தொழில் கடன்
  • சேவைத்துறை கடன்
  • Eelam club நேரடி முதலீடுகள் .
  • Eelam club கூட்டு முதலீடு
  • விளையாட்டை நிறுவன மயப்படுத்துவதன் மூலம் இலாபகரமான தொழிற்துறையாக மாற்றத்தை கொண்டுவருதல்
  • தேவைப்படும் ஒவ்வொரு துறையிலுல் உறவுகளுடன் Eelamclub

ஈழம்குழுமத்தின் வேர்களைத்தேடி!

கடந்த முப்பது வருட யுத்தம் எமது மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வையும் சிதைத்து விட்டு, ஒரு படி கூட முன்னேற்றமில்லாத நிலையையே விட்டுச் சென்றுருக்கின்றது. இதுவே யதார்தம்.தமிழ் தேசியம் பற்றியும், தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவது பற்றியும் அதற்கான போராட்டம் பற்றியும் நாம் அதிகம் கதைக்கின்றோம். ஆனால் முப்பது வருட ஆயுதப்போராட்டமும் சரி, யுத்தத்தைக்கு பின்னரான 10 வருட ஜனநாயக அரசியலும் சரி இது வரை எவ்வித பாரிய முன்னேற்றத்தையும் தமிழ்மக்களுக்கு கொடுக்கவில்லை என்பதையும், விரைவில் பெற்றுக் கொடுக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையையே உணரக்கூடியதாக உள்ளது. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர், பல லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். 40 வருடத்தில் இருமடங்காக உயர்ந்திருக்க வேண்டிய தமிழர் சனத்தொகை, முன்பு இருந்ததை விட குறைவாகவே உள்ளது. தமிழர்களின் பிறப்பு வீதம் குறைந்துவிட்டது. வடகிழக்கில் உள்ள இளைய சமுதாயத்தினரும் சந்தர்பம் கிடைக்கும் பட்சத்தில் வெளிநாடு சென்று விட வேண்டும் என்ற மன நிலையிலேயே இருக்கின்றனர். அவர்களது புலம் பெயர் உறவுகளும் அதனை ஊக்குவிக்கும் முகமாகவே உள்ளனர்.

இளைய சமுதாயத்தின் இந்த மனநிலைக்கு காரணம், அவர்களை தாயகத்தில் தங்கியிருக்க செய்வதற்கான, அவர்களது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கான எந்த பொருளாதார அபிவிருத்தி திட்டமும், முன்யோசனையும் தமிழர் அரசியல் தலைமைகளிடமோ, மாகாணசபைகளின் தலைவர்களிடமோ இருப்பதாக தெரியவில்லை.